என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனியில் 15-ம் தேதி முதல் 9 நாட்களுக்கு தங்க ரத புறப்பாடு ரத்து
- இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
- மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவிலில் முருகப்பெருமான், துவாரபாலகர்கள் மற்றும் கோவில் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நடைபெறும்.
மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா அன்றே தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.
மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் 9ம் நாளான 23-ந் தேதி விஜயதசமியன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா மாலை 5 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் கோதை மங்கலம் சென்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் முத்துக்குமாரசாமி கோவிலுக்கு திரும்பி வரும் நிகழ்ச்சியும், அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இதனையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வந்தடையும்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது. 24-ந் தேதி முதல் தொடர்ந்து வழக்கம் போல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்