என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கோட்டை அருகே மோட்டை அணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
    X
    மோட்டை அணை நிரம்பியுள்ளதை காணலாம்

    செங்கோட்டை அருகே மோட்டை அணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்த தொடர் மழையால் மோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • மோட்டை அணையானது சுமார் 1.35 சதுர மைல் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது. சுமார் 27 அடி கொள்ளளவு கொண்டது.

    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மோட்டை அணை.

    இந்த அணையானது சுமார் 1.35 சதுர மைல் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது. சுமார் 27 அடி கொள்ளளவு கொண்டது.

    இந்த அணையின் மூலம் 22 குளங்கள் வழியாக 366.15 ஏக்கர் நிலங்கள் நேர்முகமாக பாசனம் பெற்று வருகிறது. மேலும் மோட்டை, தவணை, காடுவெட்டி, ஊரபத்து சுற்று வட்டார பகுதிகளில் 100 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனமாக பயன்பெற்று வருகிறது.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்த தொடர் மழையால் மோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை அணை நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×