என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்- 14 வகையான உணவு தயாரிப்பது குறித்து பயிற்சி
- காலை சிற்றுண்டி திட்டம், முதல் கட்டமாக, 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
- முன்னோடி பயிற்சியாளர்களுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி தயாரிப்பது குறித்து பிரபல சமையல்கலை நிபுணர் தாமு என்கிற தாமோதரன் பயிற்சி அளித்தார்.
சென்னை:
மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல், ஊட்டச்சத்தை உயர்த்துதல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், முதல் கட்டமாக, 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து சத்தான சிற்றுண்டிகளை தயாரிப்பதற்கான பயிற்சியும் தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மறைமலைநகரில், முன்னோடி பயிற்சியாளர்களுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி தயாரிப்பது குறித்து பிரபல சமையல்கலை நிபுணர் தாமு என்கிற தாமோதரன் பயிற்சி அளித்தார்.
இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து முன்னோடி பயிற்சியாளர்கள் 51 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, ரவா பொங்கல், வெண் பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா, சோள ரவா கிச்சடி, சோள ரவா உப்புமா, ரவா கிச்சடி, ரவா உப்புமா, சேமியா கிச்சடி, சேமியா உப்புமா, ரவா கேசரி, சேமியா கேசரி உள்பட 14 வகையான உணவு வகைகள் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற 51 முன்னோடி பயிற்சியாளர்களும் அவர்களுக்குரிய மாவட்டங்களுக்கு சென்று பிற சமையல் நிபுணர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 2 அல்லது 3 சமையல் நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்