search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா: அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
    X

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா: அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

    • இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "மகா சிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத் திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டதை போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் நடத்தப்படும் மகா சிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வருகிற 8-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×