என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்
    X

    மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்

    • சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை சரிசெய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
    • புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

    அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×