என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 102.88 அடியாக உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 102.88 அடியாக உயர்வு

    • ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று இந்த பகுதியில் போதிய மழை இல்லை.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை குறைந்து விநாடிக்கு 3,992 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 102.74 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.88 அடியாக உயர்ந்தது.

    Next Story
    ×