என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 334 கனஅடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 334 கனஅடியாக சரிவு

    • ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 346 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101. 79 அடியில் இருந்து 101.69 அடியாக குறைந்துள்ளது.

    Next Story
    ×