என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 824 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து வினாடிக்கு 847 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு, இன்று காலை 9 மணி முதல் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 106.02 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×