search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு இல்லை என புகார்: தேர்தலை புறக்கணித்த மானூர் கிராம மக்கள்
    X

    குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு இல்லை என புகார்: தேர்தலை புறக்கணித்த மானூர் கிராம மக்கள்

    • அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன.
    • பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    இதில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் அருகே உள்ள அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன. ஆனால் காலை 10.30 மணி வரையிலும் அங்கு 12 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    மானூர் அருகே பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து அம்மன்கோவில் தெரு மக்கள், கிருஷ்ணன் கோவில் தெரு மக்கள், தெற்கு தெரு மக்கள் மற்றும் அயல்நாடு வாழ் வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அலவந்தான்குளம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று கூறி நெல்லை திருத்து மற்றும் பல்லிக்கோட்டை கிராம மக்கள் அங்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×