என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பென்னாகரம் அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது: 45 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தம்
- மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
- சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஏரியூர்:
ஏரியூர் அருகே வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டடமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, புதூர் சோளப்பாடியில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்களித்தனர்.
Next Story






