search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி- சமயமூர்த்தி தகவல்
    X

    கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி- சமயமூர்த்தி தகவல்

    • தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
    • ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தியே என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும்," கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றுலும் தவறான தகவல், சித்தரிக்கப்பட்டது" என்றார்.

    இதுதொடர்பாக, அரசால் உருவாக்கப்பட்டுள்ள உண்மை சரிபார்ப்பு குழு குறிப்பிடுகையில், "அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவலை உண்மை என நம்பி, அரசியல் கட்சியினர் சிலர், தனிநபர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்" என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×