search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
    X

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

    • 29-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • 30, 31-ந்தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    பூமத்திய ரேகையையொட்டி இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.

    அதன்பிறகு தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ந்தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும். இதன் காரணமாக 29-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    30, 31-ந்தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×