என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
    X

    வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 23-ந்தேதி வங்கக்கடலில் டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வலுப்பெறும் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×