search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி பேரணி: மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது
    X

    காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி பேரணி: மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது

    • காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    • அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×