search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருணாநிதி நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ந்தேதி அமைதிப்பேரணி
    X

    முக ஸ்டாலின்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கருணாநிதி நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ந்தேதி அமைதிப்பேரணி

    • தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராக, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார்.
    • திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.

    சென்னை:

    தி.மு.க.வில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக பதவி வகித்தவர் கருணாநிதி. தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி அவர் மரணம் அடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நாட்களில் தி.மு.க. தலைவர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி அவருக்கு 4-ம் ஆண்டு நினைவுநாள் ஆகும். இதையொட்டி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராக, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார்.

    திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டார்.

    முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 4-வது நினைவுநாளினை யொட்டி முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்துகொள்ளும் "அமைதிப்பேரணி", வருகிற-7 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×