என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கார்த்திகை தீப விழா- திருவண்ணாமலை கோவிலில் ரூ.2.29 கோடி உண்டியல் வசூல்
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட காட்சி.

    கார்த்திகை தீப விழா- திருவண்ணாமலை கோவிலில் ரூ.2.29 கோடி உண்டியல் வசூல்

    • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
    • முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுக்கு பிறகு, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.29 கோடி வசூலாகியுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.

    விழாவில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவில் ஆதி அண்ணாமலையார், திருநேர் அண்ணாமலையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், அஷ்ட லிங்க கோவில்களில் நிரந்தம் மற்றும் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 86 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

    கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 450 பேர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2,29,20,669 ரொக்கம், 228 கிராம் தங்கம், 1,478 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வசூலாகியுள்ளது.

    மீதமுள்ள 60 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடந்து வருகிறது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    கோவில் உண்டியல் காணிக்கை தொகை அதிகளவில்‌ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×