search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கந்த சஷ்டி விழா தொடங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

    திருப்போரூர்:

    முருகன்கோவில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலை இருவேளையும் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவார். வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மறுநாள்(31-ந்தேதி) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்போரூர் கந்தசாமி தகோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் செய்துள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கோவில் கொடிமரத்தில் வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க ஏற்றினர்.

    கந்த சஷ்டி விழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கி கோவில் வளாகத்தில் 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர். விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சூரசம்ஹார திருவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.

    Next Story
    ×