search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமிக்கு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
    X

    சிறுமிக்கு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

    • சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சசிகுமார் (வயது 28). இவரும் திருவெறும்பூர் நெடுஞ்சாலை வாகனத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த சங்கர் ராஜபாண்டியன் (32), நவல்பட்டு போலீஸ் நிலைய போலீஸ்காரர் பிரசாத் (26). ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் கடந்த 4-ம் தேதி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு சாதாரண உடையில் சென்று மது அருந்திவிட்டு, காதலனுடன் முக்கொம்பு பூங்காவுக்கு வந்த துவாக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டினர்.

    இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 4 பேரையும் காவலில் எடுத்து இரண்டு நாள் விசாரணை மீண்டும் நேற்று ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்காத ஜீயபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோன்று திருச்சி சமயபுரம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் விபசாரத்தை தடுக்க தவறிய அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஆகவும், மங்கள மேடு இன்ஸ்பெக்டர் நடராஜன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அரியலூர் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவினை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×