search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக்கின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க நடவடிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜாபர் சாதிக்கின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க நடவடிக்கை

    • ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
    • ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர்சாதிக் தி.மு.க. அயலக அணியில் பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் இருந்து நியூலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்புவதாக கூறி போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாகவும் வெளியான தகவலையடுத்து அது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப் பொருட்களை கடத்தி சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஜாபர் சாதிக் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார் என்பதை பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் முடிவில் ஜாபர்சாதிக்கின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் முடக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பான விவரங்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் திரட்டியுள்ளனர்.

    இதனை வைத்து ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் பற்றிய பட்டியலும் தயாராகி வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு ஜாபர் சாதிக் பணத்தை வாரி இறைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தையே அவர் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் வாரி வழங்கியுள்ளார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிடம் பணம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×