search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்துக்கு சிறப்பு பஸ்கள்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்துக்கு சிறப்பு பஸ்கள்

    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.
    • எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன் ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

    அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணிநேரத்துக்கும் பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டிக்கும் மாநகர பஸ்களை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.

    இதற்காக பல பஸ்களைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.

    போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பஸ்கள் அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல பாரீஸ் கார்னர், சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×