என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6700 கனஅடியாக அதிகரிப்பு
- விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3980 கன அடியாக உயர்ந்தது.
- நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6700 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3980 கன அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து இன்று நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6700 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 101.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 101.62 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
Next Story






