search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வல்லூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா, தெருமுனை கூட்டம்
    X

    வல்லூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா, தெருமுனை கூட்டம்

    • அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லுரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை சார்பில் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு,கட்சி கொடியேற்றுதல்,நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவண மைய மாநில துணைச் செயலாளர் சி. நீலமேகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் நாடாளுமன்ற செயலாளர் நெடுஞ்செழியன் பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், வல்லூர் ரவிமணி, நாதன், வடிவேல், மனோ, குமரவேல், மோத்தி, லலிதா, தேசியதிலகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் துவக்கமாக வல்லூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து வட சென்னை அனல் நிலைய சாலை, வல்லூர்சாலை, உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×