search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து புகார் செய்ய செல்போன் எண்கள்
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து புகார் செய்ய செல்போன் எண்கள்

    • திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா? என்று சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையடுத்து திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் தமிழக - ஆந்திரா எல்லையோரம் உள்ள புதூர்மேடு, தேவலாபுரம், காட்டூர், பொன்பாடி, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு, சத்தியவேடு ரோடு, பொம்மராஜா குளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், கள்ளச்சாராயம், போலி மதுபானம், சில்லரை விலையில் மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 63799 04848, 9444005105 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்சப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×