search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி, சோழவரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி
    X

    பொன்னேரி, சோழவரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி

    • மனித சங்கிலியில் பொன்னேரியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை, மதசார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி முன்னிறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பொன்னேரி அண்ணா சிலை அருகில் இருந்து ஹரிஹரன் பஜார் வரையும், காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் வரையும் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட மனித சங்கிலியில் பொன்னேரியில், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு இடது, வலது, முஸ்லிம் லீக் கட்சி, திராவிட கட்சி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கட்சி, மக்கள் விடுதலை, பழங்குடி மக்கள் இயக்கம், ஜனநாயக தொழிலாளர் கட்சி உட்பட கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×