என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை பெண் யூடியூபர்- ஏமாற்றி பணம் பறித்தது எப்படி?
- ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
- ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையில் யூடியூப் மூலம் பழகி முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக, விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 38) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹேமலதா கடந்த 2020-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவர் முதலில் பொழுது போக்கு அம்சங்களை மையமாக கொண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதற்கு பார்வையாளர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்து வந்தது.
இந்நிலையில் ஹேமலதாவை ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு, தங்களின் உற்பத்தி பொருட்களை யூடியூப் சேனல் மூலம் பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டது. எனவே அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆகா ஓகோவென புகழ்ந்து, அதனை சமூகவலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்காக அவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கியது.
இது ஹேமலதாவிடம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டது. எனவே அவர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அங்கு உள்ள பொருட்களை யூடியூப் மூலம் பிரபலப்படுத்தினார். இதில் அவருக்கு பணம் கொட்டியது.
யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே, ஹேமலதாவை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது. ஹேமலதா சமீபத்தில் யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களின் பணத்துக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்துக்கு பிறகும் ரொக்கத்தொகை வந்து சேரவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா என்பவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா கணவர் ரமேஷ் மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து யூடியூப் மூலம் போலி வாக்குறுதி கொடுத்து பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யூடியூபர் ஹேமலதா, கணவர் ரமேஷ் மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமிரா மற்றும் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கோவை குற்றப்புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமலதா தலைமையிலான கும்பல் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, வாடிக்கையாளர்கள் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.1½ கோடி வரை மோசடி செய்திரு க்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
எனவே ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்