search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாராயம் விஷமாக மாறுவது எப்படி?
    X

    சாராயம் விஷமாக மாறுவது எப்படி?

    • சாராயம் எளிதில் பற்றி எறியும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
    • சரியான முறையில் தண்ணீர் கலக்கவில்லை என்றால் சாராயம் விஷத்தன்மையோடு இருக்கும்.

    சாராயத்தில் 4 வகை உண்டு. அதில் புதுச்சேரி சாராய தொழிற்சாலையில் தயாரிப்பது மில்லி, தமிழகத்தில் வெல்லம், கருவேலமர பட்டை, யூரியா, அழுகிய பழங்கள் போன்றவைகளை பேரல்களில் ஊறல் போட்டு தயாரிப்பது பட்ட சாராயம்.

    மில்லி புதுச்சேரியிலும், பட்ட சாராயம் தமிழ்நாட்டிலும், ஆர்.எஸ்., என்.எஸ்., ஆகியவை ஆந்திரா, கர்நாடகாவில் தயார் செய்யப்படுகிறது. உயிர் கொல்லி சாராயம். ஆர்.எஸ்., என்.எஸ். ஆகிய சாராயங்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கலக்காமல் விஷத்தன்மையோடு டேங்கர் லாரிகளில் தமிழ்நாட்டிற்கு வருகிறது.

    இந்த சாராயம் எளிதில் பற்றி எறியும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. விற்பனை செய்யப்படுவதற்கு முன், ஒரு லிட்டருக்கு 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் கலக்க வேண்டும். அப்படி சரியான முறையில் தண்ணீர் கலக்கவில்லை என்றால் சாராயம் விஷத்தன்மையோடு இருக்கும்.

    Next Story
    ×