search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு

    • ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திடீரென்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்து வந்தது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நேர நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

    மழை அளவு பொறுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவும் குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×