search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சியில் வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனையான பச்சை மிளகாய்
    X

    பொள்ளாச்சியில் வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனையான பச்சை மிளகாய்

    • வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகிறது.

    இதில் பச்சைமிளகாய், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த ஆண்டு துவக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பல கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி ஓரளவு இருந்தது. இதனால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பச்சை மிளகாய் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் சுற்று வட்டார கிராமங்களில் புதிதாக சாகுபடியால் வெளியிடங்களிலும் பச்சை மிளகாய் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பச்சை மிளகாய் வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100 முதல் ரூ.110 வரை என கூடுதல் விலைக்கு போனது. வரும் நாட்களில் பச்சை மிளகாய் வரத்து இன்னும் குறைந்தால், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×