search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

    • அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
    • நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது

    சென்னை:

    சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

    சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×