search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோபி, பெருந்துறை, சித்தோடு பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் பரபரப்பு
    X

    சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் பூத்தில் வாக்குபதிவு எந்திரம் பழுது ஏற்பட்டதால் அங்கு திரண்ட மக்களை காணலாம்.

    கோபி, பெருந்துறை, சித்தோடு பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் பரபரப்பு

    • கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.
    • பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது.

    சித்தோடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் காலை முதலே ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் இன்று காலை ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தோடு அடுத்த மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இங்கு அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 23-ல் பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.

    அப்போது அங்கு சோதனை வாக்குப்பதிவு முடிந்த உடன் 5 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்தனர் இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது ஏற்பட்டது.

    இதையடுத்து அடுத்த கட்டமாக எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைதொடர்ந்து வாக்குப்பதிவு எந்திர பழுது சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு மீண்டும் தெடங்கியது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 6 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.

    அப்போது அந்த 2 பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு எற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த நாமக்கல்பாளையம் பகுதியில் இன்று காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பூத்தில் காலை 8.20 மணிக்கு பழுது ஏற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் வந்து பழுதை சரி செய்தனர். இதைதொடர்ந்து 8.40 மணிக்கு சரி செய்யப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் மீண்டும் வாக்களித்து சென்றனர்.

    பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பணியாளர்கள் வந்து சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காதிருந்து வாக்களித்தனர். இதனால் இந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×