என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்- ஜி.கே.வாசன்
- தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு புதிய மாடலாக உருவெடுத்துள்ளது.
- காவல்துறையின் தாமதமான நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
சென்னை:
தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு புதிய மாடலாக உருவெடுத்துள்ளது. காவல்துறையின் தாமதமான நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இந்நிலையில், மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகும் நெல்மணிகள் நிலத்தில் சாய்ந்து உள்ள நிலையில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே விவசாயிகளுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சங்கடமான நேரங்களில் விவசாயிகளின் துயர்துடைக்க அரசு முன் வரவேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்