search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாலிபரிடம் செக்ஸ் ஆசை காட்டி நகை-பணம் பறிப்பு: 4 பேர் கைது
    X

    வாலிபரிடம் செக்ஸ் ஆசை காட்டி நகை-பணம் பறிப்பு: 4 பேர் கைது

    • போலீசாருக்கு ராக்கி மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர்.
    • கார்த்திகேயன் செல்போன் செயலி மூலம் வாலிபரை தொடர்பு கொண்டு செக்ஸ் ஆசை காட்டி அவரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    காளப்பட்டி:

    கோவையை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    இவர் செல்போனில் கிளுகிளுப்பான செக்ஸ் செயலி ஒன்றை பயன்படுத்தினார். அதன் மூலம் இவருக்கு ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து வாலிபர், சரவணம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ராக்கிக்காக காத்திருந்தார்.

    அங்கு ராக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் துடியலூர் ரோட்டில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசி கொண்டு இருந்தனர்.

    அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென அங்கு பேசி கொண்டு இருந்த ஆண் நர்சிடம் சென்று பணத்தை கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார்.

    பின்னர் அந்த வாலிபர்கள் வாலிபரிடம் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மற்றும் ராக்கி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாருக்கு ராக்கி மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவரது பெயர் ராக்கி இல்லை என்பதும், உண்மையான பெயர் கார்த்திகேயன் (வயது 27) என்பதும், தூத்துக்குடியை சேர்ந்தவர் தெரியவந்தது.

    கார்த்திகேயன் செல்போன் செயலி மூலம் வாலிபரை தொடர்பு கொண்டு செக்ஸ் ஆசை காட்டி அவரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    அதற்காக அவர் தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த மாரிசெல்வம் (23), திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரிவிஷ்னு (21) ஆகியோரிடம் முன்கூட்டியே தான் வாலிபரிடம் பேசும் இடத்தை தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு 3 பேரையும் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி மாரிசெல்வம், அபிராம், ஹரிவிஷ்ணு ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×