என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடக்கம்
- வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது.
- பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையுடன் இணைந்த சீர்மிகு சட்டப் பள்ளியிலும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
இதில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு சட்டப்பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தில் (www.tndalu.ac.in) தொடங்கியுள்ளது. வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது. சட்டப் படிப்பு, 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.
மூன்றாண்டு படிப்புக்கு எல்.எல்.பி., எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் பெயரிலும், ஐந்தாண்டு படிப்புக்கு பி.ஏ, எல்.எல்.பி. மற்றும் பி.ஏ, எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் இருநிலைகளிலும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்