என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ராமேசுவரத்தில் சூறைக்காற்று- மீனவர்கள் மீன்பிடிக்க இன்று திடீர் தடை
BySuresh K Jangir6 Aug 2022 4:12 AM GMT
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
- ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
இதனால கடல் சீற்றமாக உள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று திடீர் தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள், 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ. 3 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X