search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காட்டில் கடலில் மீன் பிடிக்க சென்றவர் படகில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
    X

    பழவேற்காட்டில் கடலில் மீன் பிடிக்க சென்றவர் படகில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    • கஜேந்திரன் இன்று அதிகாலை கடலுக்கு படகில் மீனவர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார்.
    • கஜேந்திரன் கடலுக்குள் செல்லும்போது திடீரென படகிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். மீனவர். இவர் இன்று அதிகாலை கடலுக்கு படகில் மீனவர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். கடலுக்குள் செல்லும்போது திடீரென படகிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனால் படகில் சென்ற சக மீனவர்கள் அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    பின் மேல் சிகிச்சைக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது கஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×