search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் ஜம்மு காஷ்மீரில் தொடரும் தீவிரவாதம்- பரூக் அப்துல்லா பேட்டி
    X

    சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் ஜம்மு காஷ்மீரில் தொடரும் தீவிரவாதம்- பரூக் அப்துல்லா பேட்டி

    • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
    • தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.

    கொடைக்கானல்:

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் இவரது தந்தை ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அன்னை தெரசா ஆகியோர் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது. இதனை நினைவில் அசைபோடவே நான் இங்கு வந்தேன்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்னமும் தீவிரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையில் வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.

    இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி 20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும்.

    மோடியும், பாஜகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்கு கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந்தியா எங்களுக்கு தேவை இல்லை. தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.

    தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×