search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரியலூர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
    X

    அரியலூர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

    • தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
    • புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி, விருதுநகர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்று சேர்த்து பின்னர் அவர்கள் யார்? யார்? என அடையாளம் கண்டனர்.

    தொடர்ந்து காயம் அடைந்த 13 பேரில் 7 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×