search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி, நத்தம், திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
    X

    பழனியில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களையும், நத்தத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்தவர்களையும் காணலாம்.

    பழனி, நத்தம், திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

    • நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி டி.கே.என். புதூர் 2-வது வார்டு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து சென்ற நிலையில் இன்று தாங்கள் யாரும் வாக்களிக்க செல்ல மாட்டோம் என கூறி ஊரின் முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகையை வைத்தனர். மேலும் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி தாங்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    யாரும் ஊருக்குள் வர வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூறி பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்.

    சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் சாலை வசதி அமைத்து தரவில்லை. மேலும் கிராம மந்தைக்கு வண்ணக்கல் பதிக்க கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை கடை அமைத்து தரவில்லை. மேலும் எங்கள் பல கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட சின்ன அய்யன்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×