search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழையால் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு
    X

    குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்த நிலையில் அதனை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    கனமழையால் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு

    • குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
    • வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.

    தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

    மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×