என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தூத்துக்குடியில் போதை பொருட்கள் கடத்தல்?- 3 பேரை பிடித்து விசாரணை
- பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.
- தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பகுதியில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி, தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் சில பாக்கெட்டுகள் இருந்தன. அவை போதை பொருட்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது.
அப்போது அங்கு ஒருவர் மர்மநபர்கள் வைத்திருந்த பொருட்களை வாங்குவதற்காக வந்தார். அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வயர்லெஸ் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று அவர்கள் எந்தெந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்