என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருவள்ளூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு சென்ற பாலில் கலப்படம் செய்த டிரைவர்
- பால் பதப்பட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
- லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆவின் பொருட்களை கைப்பற்றினர்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு தினமும் 1.25 லட்சம் லிட்டர் பால் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டப் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
அங்கு பால் பதப்பட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு லாரியில் கொண்டு வரும் பாலில் கலப்படும் செய்து தெரிய வந்துள்ளது.
ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கரை அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தயாளன் (70) வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 140 கிலோ பால் பவுடர், 150 கிலோ வெண்ணெய், 5 லிட்டர் பால், கொழுப்பை தனியாக பிரிக்கக்கூடிய எந்திரம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் காக்களூர் பால் பண்ணையில் டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் அவர்தான் இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆவின் பொருட்களை கைப்பற்றினர். மேலும் அங்கு இருந்த பாலையும் பறிமுதல் செய்து மாதவரம் பால் பண்ணையில் பரிசோதனை செய்தனர்.
அதில் அந்த பாலில் கலப்படம் செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜ்குமார், தனது தந்தை வீட்டிற்கு ஆவின் பாலை கொண்டு சென்று அங்கு கொழுப்பை எடுத்து விட்டு அதற்கு பதிலாக பால் பவுடர் மற்றும் தண்ணீரை கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்காக பாலில் இருந்து கொழுப்பை பிரிக்கும் எந்திரத்தையும் அவர் பயன்படுத்தி உள்ளார். அதன் பிறகு பாலை கே.ஜி. கண்டிகையில் உள்ள சொந்த வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு பாலில் பவுடரையும், தண்ணீரையும் தேவையான அளவிற்கு கலப்படம் செய்துள்ளார். கலப்படத்திற்கு தேவையான பால் பவுடர் மற்றும் வெண்ணெயை காக்கனூர் பார் பண்ணையில் ராஜ்குமார் திருடி பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் ராஜ்குமார் தொடக்க கூட்டுறவு பால் வினியோக சங்கத்தில் தனது தந்தை தயாளன் உறுப்பினராக இருப்பதாக பெயரை பதிவு செய்து உள்ளார். ஆனால் அவர் பால் உற்பத்தியாளரே இல்லை என தெரிய வருகிறது.
இது தவிர ஆந்திராவில் பாலை வாங்கி ஆவினுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறார். பொது மேலாளர் ராஜ்குமார் மற்றும் துணைப் பொது மேலாளர் அனிஷ் ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
காக்கனூர் பால் பண்ணையில் கடந்த சில வருடங்களாக பால் கலப்பட மோசடி நடந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
ராஜ்குமாரின் தந்தையிடம் பால் மாடுகள் எதுவும் இல்லை. சங்கத்திற்கு பால் சப்ளை செய்யாமல் அவரது பெயரில் நடந்து வந்த மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்