என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் ஆவதே லட்சியம்- சேலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் பேட்டி
- சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 323 அரசு மேல்நிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.
- எனது பெற்றோரும், பள்ளியும் உறுதுணையாக இருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 323 அரசு மேல்நிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவன் சக்திவேல் 600-597 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-100, என மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த சாதனை பற்றி மாணவன் சக்திவேல் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வுக்கு பல்வேறு பாட புத்தகங்களை வாங்கி படித்தேன். இதனால் என்னால் 597 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. இதற்கு எனது பெற்றோரும், பள்ளியும் உறுதுணையாக இருந்தது. நான் டாக்டர் ஆவதே லட்சியமாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






