search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
    X

    ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு 'திடீர்' ஆய்வு

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் இப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதன் பின்னணி நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த இரவு நேர அதிரடி ஆய்வால் ஓட்டேரி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×