search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுங்கத்துறை தேர்வில் புளூடூத் பயன்படுத்தி முறைகேடு: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
    X

    சுங்கத்துறை தேர்வில் புளூடூத் பயன்படுத்தி முறைகேடு: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    • சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த தேர்வில் புளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட ரூ.10 ஆயிரம் பேரம் பேசினோம்.
    • தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் புளூடூத் பொருத்தி தேர்வு எழுதி கைதான 28 பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை டிரைவர், கேண்டீன் அட்டெண்டர் தேர்வில் புளூடூத் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் பிடிபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 28 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதானவர் அளித்த வாக்குமூலத்தில்,

    ரெயிலில் வந்தபோது அரியானாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் மோசடியை அரங்கேற்றினோம்.

    சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த தேர்வில் புளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட ரூ.10 ஆயிரம் பேரம் பேசினோம்.

    கைதான சர்வன்குமாரின் உண்மையான பெயர் துளசியாதவ், அவர் மீது ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் புளூடூத் பொருத்தி தேர்வு எழுதி கைதான 28 பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    புளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரும் இனி எந்த அரசு போட்டி தேர்வுகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×