search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி
    X

    குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி

    • ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சற்று நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளம் குறைந்தால் அங்கு இன்று மாலைக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளத்தால் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தூண்கள், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு இருந்ததால் செங்கல்கள் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதம் அடைந்தது .

    அருவிக்கரையை சுற்றிலும் பொதுமக்கள் நின்று குளிக்கும் பகுதிகளில் அருவியில் அடித்து வரப்பட்ட கற்கள், மரத்துண்டுகள், மண் குவியல்கள் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றும் நடவடிக்கையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    Next Story
    ×