search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணம் நிச்சயமான கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவருடன் ஓட்டம்- பெற்றோர் போலீசில் புகார்
    X

    திருமணம் நிச்சயமான கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவருடன் ஓட்டம்- பெற்றோர் போலீசில் புகார்

    • மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மணமகனை தேடினர்.
    • மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயது ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அவர்கள் தங்களது மகளுக்கு அறிவுரை கூறினார்.

    மேலும் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மணமகனை தேடினர். பின்னர் வாலிபர் ஒருவரை பேசி நேற்று திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். ஆனால் மாணவிக்கு இது பிடிக்கவில்லை.

    வேதனை அடைந்த மாணவி நேற்று மாலை இதுகுறித்து தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தங்களது மகள் மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்களது மகளை அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அவர்கள் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×