என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
    X

    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

    • நித்தின் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
    • ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார்.

    மாமல்லபுரம்:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்தின்(வயது20). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பயோடெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்தனர்.

    இதில் ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் கடற்கரை கோயில் அருகே நித்தின் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×