search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழித்துறையில் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை
    X

    குழித்துறையில் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை

    • ரெதின் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ரெதினுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு ஒடையன் விளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ்குமார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரெதின் ரெதீஷ் ஜெயந்திரோஜர் (வயது 22).

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு சென்று உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரெதின் வீட்டிலிருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தேடினார்கள்.

    இந்த நிலையில் குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் பகுதியில் ரெதின் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த ரெதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×