என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா- கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர்
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
- செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார்.
காஞ்சிபுரம்:
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஆர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறந்து பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னா டை அணிவித்து கலெக்டர் ஆர்த்தி கவுரவித்தார். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரூ.2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, தாசில்தார் பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் பாலாஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலு வலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கவுரவித்தார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால், வட்டாட்சியர் மதியழகன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி, சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ராசாத்தி செல்வ சேகரன், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் நகரத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, ஆலாடு ஊராட்சியில் தலைவர் பிரசாத், அத்திபட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், காட்டூர் ஊராட்சியில் தலைவர் செல்வ ராமன் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட வருவாய் துறை அலுவலர் மேனுவல் ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தேசிய கொடியை ஏற்றினர். செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.






