search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூரில் குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட 16 மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்- தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்
    X

    திருவள்ளூரில் குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட 16 மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்- தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்

    • மாணவிகளுடன் “காபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
    • அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 53 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2020-ம் ஆண்டு 41 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2021 -ம் ஆண்டு 24 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் 2022 -ம் ஆண்டு 18 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி பயிலவும். தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயின்றுவரும் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 குறித்தும் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக விவரித்தும், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயிலும் உங்களை போன்று உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சம்பந்த ப்பட்ட துறைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடை பெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்க ளோடு "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி அம்மாணவிகளை பாராட்டி, புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×